தூத்துக்குடியில் சத்யா கோப்பை அகில இந்திய கைப்பந்து போட்டி
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகத்தின் சார்பில், ‘சத்யா கோப்பை’க்கான 27வது அகில இந்திய கைப்பந்துப் போட்டி ஜூன் 9 தொடங்கி ஜூன் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் குறித்து சத்யா குழும முக்கிய நிர்வாகி ஜே.ஜாக்சன் சாமுவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில்;
இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவியரை விளையாட்டில் ஊக்கப்படுத்தும் நோக்கில், சத்யா குழுமம் ‘டைட்டில் ஸ்பான்சராக’ இணைந்து இப்போட்டிகளை நடத்துகிறது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே மின்னொளி வெளிச்சத்தில் இந்தத் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டியின் தொடக்க நாள் மற்றும் நிறைவு நாட்களில் தலா 2 போட்டிகளும், இடைப்பட்ட நாட்களில் நாள்தோறும் 3 போட்டிகளும் லீக் (League) முறையில் இரவு 7:00 மணி முதல் நடைபெறுகின்றன. இப்போட்டிகளைக் காணப் பொதுமக்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.
களமிறங்கும் முன்னணி அணிகளின் விபரம்;
ஆண்கள் பிரிவு (6 அணிகள்) தில்லி இந்தியன் நேவி, பெங்களூரு கர்நாடக மாநிலம், திருவனந்தபுரம் கேரள காவல் துறை, தில்லி வருமான வரித் துறை, சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் கேரளா கேஎஸ்இபி.
பெண்கள் பிரிவு (4 அணிகள்): திருவனந்தபுரம் கேரள காவல் துறை, சென்னை ஐசிஎஃப், கொல்கத்தா கிழக்கு ரயில்வே மற்றும் கேரளா எம்.ஜி. பல்கலைக்கழகம். பங்கு பெறவுள்ளன.
பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள்;
விளையாட்டில் பாலினப் பாகுபாடின்றி வெற்றிபெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவினருக்கும் சமமான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் பரிசாக ரூ.1.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் அரையிறுதியில் தோல்வியடையும் 2 அணிகளுக்குத் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. முதலிடம் பிடிக்கும் அணிகளுக்கு புகழ்பெற்ற ‘சத்யா கோப்பை’ மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு தனிநபர் சிறப்புப் பரிசுகளும் உள்ளன.
ஜூன் 9 அன்று நடைபெறும் தொடக்க விழாவில், தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து ஜூன் 17 அன்று நடைபெறும் இறுதி நாள் நிறைவு விழாவில், வஉசி துறைமுக தலைவர் சுஷாந்தகுமார் புரோஹித் தலைமையில், மாநில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் கலந்துகொண்டு வெற்றிபெறும் தேசிய அணிகளுக்கு பரிசுகளையும் சத்யா கோப்பையையும் வழங்கி பாராட்டவுள்ளார்.
பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள்;
விளையாட்டில் பாலினப் பாகுபாடின்றி வெற்றிபெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவினருக்கும் சமமான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் பரிசாக ரூ.1.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் அரையிறுதியில் தோல்வியடையும் 2 அணிகளுக்குத் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. முதலிடம் பிடிக்கும் அணிகளுக்குப் புகழ்பெற்ற ‘சத்யா கோப்பை’ மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்குத் தனிநபர் சிறப்புப் பரிசுகளும் உள்ளன.
விளையாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்டக் கைப்பந்துக் கழகத் தலைவர் டி.ஜான் வசீகரன், செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், பொருளாளர் எஸ்.செயின்ட் ரவிராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
